காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 2,338 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு 100-யைக் கடந்துள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்று உறுதியானதால் சோனியாகாந்தி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தகவல் தெரிவித்துள்ளது.