குலை நடுங்க வைக்கும் கொடூரம்..! பெற்றோரை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட மகன்

Tamil nadu Tamil Nadu Police
By Thahir Nov 29, 2022 05:54 AM GMT
Report

கும்பகோணம் அருகே தாய், மற்றும் தந்தையை கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்டு வந்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெற்றோர் உடலை சமைத்து சாப்பிட்டு வந்த மகன் 

கும்பகோணம் அருகே திலயம்பூர் பகுதியில் லட்சுமி - கோவிந்தராஜ் தம்பதி. இவர்களுக்கு ராஜேந்திரன் என்ற ஒரு மகன் உள்ளார். ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரையும் கொலை செய்துள்ளார். பின்னர அவர்களது உடல்களை வீட்டில் வைத்துக் கொண்டு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், அவ்வழியாக சென்ற பொதுமக்களுக்கு துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதிர்ச்சியடைந்த போலீசார் 

இதையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டின் உட்புறம் சென்று பார்த்த போது ராஜேந்திரன் உள்ளே இருந்துள்ளார்.

The son who killed his parents and cooked and ate the body

மேலும் ரத்த கரை படிந்த கத்தியும் இருந்துள்ளது. பின்னர் அவர் பெற்றோரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

பின்னர் ராஜேந்திரனை கைது செய்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.