Saturday, May 31, 2025

பெற்ற தாயை அரிவாளால் வெட்டிய மகன்..துடி துடித்து சம்பவ இடத்திலேயே இறந்த தாய்..!

Ariyalur SonMurder MotherDeath PoliceArrestSon
By Thahir 3 years ago
Report

அரியலுார் அருகே பெற்ற தாயை குடும்ப தகராறு காரணமாக அரிவாளால் வெட்டி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் கிராமத்தை சேர்ந்த கணேசனின் மனைவி சரஸ்வதி. இவருக்கும் இவரது மகன் ரவிச்சந்திரனுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பெற்ற தாயை அரிவாளால் வெட்டிய மகன்..துடி துடித்து சம்பவ இடத்திலேயே இறந்த தாய்..! | Son Muder Mother Police Arrest Ariyalur

இந்நிலையில் இன்று மாலை வீட்டில் இருந்த ரவிசந்திரனுக்கும் அவரது தாய் சரஸ்வதிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரவிசந்திரன் அரிவாளால் சரஸ்வதியை கொடூரமாக வெட்டியுள்ளார்.

இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீழப்பழூவூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயையே மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.