தாயை முட்புதரில் விட்டுச் சென்ற மகன் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம்

Crime Tamil Nadu Chennai Ponneri
By mohanelango Apr 16, 2021 10:53 AM GMT
Report

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த குன்னமஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் அருகில் உள்ள ஆற்றங்கரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கிருந்த ஒரு முட்புதரில் அழுகை சத்தம் கேட்டது. அந்த பெண்கள் முட்புதருக்கு சென்று பார்த்தபோது ஒரு மூதாட்டி அங்கிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இரண்டு கால்களும் செயலிழந்த நிலையிலிருந்த அந்த மூதாட்டியை அங்கிருந்து மீட்டு தூக்கி வந்த அவர்கள் பொன்னேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர். அந்த மூதாட்டியின் பெயர் காந்திமதி என்பதும் அவர் சென்னை அடுத்த மணலி அருகே உள்ள பெரிய சேக்காடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

தாயை முட்புதரில் விட்டுச் சென்ற மகன் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சம்பவம் | Son Leaves Mother Alone In Dumpyard At Ponneri

அவரது மூத்த மகன் பெயர் ரவி, கொத்தனார் வேலை செய்து வருகிறார், இளைய மகன் பெயர் சங்கர் குறி சொல்பவர் என்பதும் தெரிய வந்தது.

தனது இளைய மகன் சங்கர் நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் இங்கு அழைத்து வந்து முட்புதரில் போட்டு விட்டு சென்றதாகவும் அந்த மூதாட்டி போலீசாரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்த மூதாட்டியை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பெற்ற மகனே வயதான தாயை கொஞ்சமும் இரக்கமில்லாமல் முட்புதரில் வீசிவிட்டு சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.