மாமியாருடன் கள்ள உறவு.. ஜோடியாக எஸ்கேப்பான மருமகன் : காவல்நிலையத்தில் கதறிய மாமனார்
மாமியாருடன் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவான மருமகன் செயலால் மாமனார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாமியார் மருமகன் கள்ள உறவு
ராஜஸ்தான் மாநிலத்தில் சிரோகி மாவட்டத்தில் உள்ள சியாகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் . இவருக்கு மூன்று மகள்கள் . ரமேஷ் தனது மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

காவல்துறையில் மாமனார் கதறல்
இந்த நிலையில் நாராயணன் ஜோகி தனது மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் அப்போது மாமியாருக்கும் மருமகனுக்கு இடையே தகாத உறவு உண்டான நிலையில் இருவரும் கடந்த 1ம் தேதி அன்று வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து அன்று இரவே மாமியாரும் மருமகனும் வெளியேறியுள்ளனர். இதனால் நாராயணன் ஜோகியின் மாமனார் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகு மகளும் மருமகனும் எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார்கள். எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். நாராயணன் ஜோகி டிசம்பர் 30ஆம் தேதி எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நானும் மருமகனும் கூடுதலாக மதுபானம் சாப்பிட்டோம் அடுந்த நாள் காலையில் எழுந்து பார்த்த போது எனது மனைவியையும் மருமகனையும் காணவில்லை.

எனது மனைவியை மருமகன் மயக்கி அழைத்து சென்றுள்ளார் என காவல்நிலையத்தில் கதறியுள்ளார் ரமேஷ்.
இதனை புகாராக பெற்ற காவல்துறையினர் ஜோடியாக தலைமறைவான மாமியார் மருமகனை தேடி வருகின்றனர்.