என் வாழ்க்கை முடிஞ்சிட்டு சொல்றவங்கள பாத்தா சிரிப்புதான் வருது: ரஹானே ஓபன் டாக்

rahane australia indiancricket
By Irumporai Feb 11, 2022 10:15 AM GMT
Report

தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக கூறும் நபர்களை பார்த்தால் சிரிப்புதான் வருவதாக ராஹானே கூறியுள்ளார்.

ஹானே கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த போராடி வருகிறார். பலர் தற்போதே ரஹானே தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் உள்ளார் என்று கூறிவருகின்றனர்.

ரஹானே ஏற்கனவே தனது கடைசி டெஸ்டில் இந்தியாவுக்காக விளையாடிவிட்டார் என்று பலர் நினைக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்திய நேர்காணலில் ரஹானே தன் மனதில் இருந்த விஷயங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

விராட் கோலி இல்லாத நேரத்தில் இந்திய அணியை ரஹானே வழிநடத்தி இருந்தார். அந்த சமயத்தில் தான் சில முக்கிய முடிவுகளை எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் வேறு யாரோ அதற்க்கு பெருமை எடுத்து கொண்டதாக கூறியுள்ளார். 

என் வாழ்க்கை முடிஞ்சிட்டு சொல்றவங்கள பாத்தா சிரிப்புதான் வருது: ரஹானே ஓபன் டாக் | Someone Credit Decisions In Australia Rahane

இந்திய அணியின்  வரலாற்று வெற்றிக்காக ரஹானே பலரின் பாராட்டுகளைப் பெற்றிருந்தாலும், அணியில் அவரது இடம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தொடருக்கான தேர்வுக்கு அவர் பரிசீலிக்கப்பட மாட்டார் என்று கருத்துகள் இருந்தாலும், ரஞ்சியில் சிறப்பாக விளையாடினால் வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று மக்கள் கூறும்போது தனக்கு சிரிப்புதான் வருவதாக கூறினார். உண்மையில் விளையாட்டை அறிந்தவர்கள் அப்படிப் பேச மாட்டார்கள் என ராஹானே கூறியுள்ளார்.