நாடு முழுவதும் டெலிகிராமுக்கு திடீர் தடை; இதனால் தான் - அதிரடி நடவடிக்கை!
டிக்டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக ஊடக தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெலிகிராம்
அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கை ஐக்கிய படைகளின் ஆதரவோடு அல்-ஷபாப் குழுவினருக்கு எதிரான இரண்டாம் கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள சோமாலியா ஆயத்தமாகி வருகிறது.
பயங்கரவாதிகளை சமாளிக்க இயலாது தவித்து வருகிறது. அதன் வரிசையில், டிக்டாக், டெலிகிராம் ஆகிய சமூக ஊடக செயலிகளோடு ஒரு ஆன்லைன் பந்தய செயலி உள்ளிட்டவை சோமாலியாவில் தடை செய்யப்படுகின்றன.
தடை
இதன் வாயிலாக பயங்கரவாதத்துக்கான பிரச்சாரம் முன்னெடுக்கப்படுவதாக குற்றம்சாட்டபப்டுகிறது. இதனையடுத்து, ஆக.24-க்குள் மேற்கண்ட செயலிகளை சோமாலியாவில் தடை செய்யுமாறு
நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவுக்கு உடன்படாத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக தீவிர சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.