சாலமன் பாப்பையா காலமானார்

By Fathima Sep 11, 2026 09:20 AM GMT
Report

பட்டிமன்ற பேச்சாளரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பின் காரணமாக மதுரையில் இன்று காலமானார்.

1936ம் ஆண்டு பிறந்தவர் சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றியவர்.

திருக்குறள் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு சாலமன் பாப்பையா உரை எழுதி இருக்கிறார், 12000க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்திய புகழுக்குரியவர்.

வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார், 2000ம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருதினையும், 2021ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலமன் பாப்பையா காலமானார் | Solomon Pappaiah Passed Away