சென்னை நோக்கி நடுவானில் பறந்த விமானத்தில் ராணுவ வீரர் செய்த காரியம் - அலறிய பயணிகள்!

Tamil nadu Chennai India Flight
By Jiyath Sep 20, 2023 02:58 AM GMT
Report

பறந்து கொண்டிருக்கும்போதே விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்த ராணுவ வீரரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கதவை திறக்க முயற்சி

இன்று அதிகாலை டெல்லியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் ஒன்று 145 பயணிகளுடன் வந்துள்ளது. இதில் செங்கத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற ராணுவ வீரர் ஒருவரும் பயணித்துள்ளார்.

சென்னை நோக்கி நடுவானில் பறந்த விமானத்தில் ராணுவ வீரர் செய்த காரியம் - அலறிய பயணிகள்! | Soldier Tried To Open The Plane S Emergency Door

பயணத்தின்போது மணிகண்டன் விதிகளை மீறி விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயற்சி செய்துள்ளார். இதனைக் கண்ட சக பயணிகள் அச்சத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர்.

இதனையடுத்து பயணிகள் அலறியடித்துக்கொண்டு விமான பணிப்பெண்களிடம் இதுகுறித்து புகார் அளித்தனர். உடனடியாக வந்த பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் அந்த ராணுவ வீரரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

விசாரணை 

மேலும், விமானம் தரையிறங்கிய பின், மணிகண்டன் மீது முறைப்படி இண்டிகோ விமான நிர்வாகம் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.


இண்டிகோ விமான நிர்வாகம் புகாரில் குறிப்பிட்டதாவது "டெல்லியிலிருந்து, சென்னை வந்த 6E 6341 என்ற எண்ணை கொண்ட தங்களது விமானத்தில் விதிகளை மீறி அவசரகால கதவைத் திறக்க முயற்சி செய்ததால், மணிகண்டன் என்ற பயணியின் மீது விசாரணை நடத்துமாறு இண்டிகோ விமான நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போது மணிகண்டனிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.