வேலையின்போது திடீரென மண் சரிந்து புதைந்த இருவர் - போராடி உயிருடன் மீட்ட பரபரப்பு சம்பவம்

Exciting incident soil-collapsed buried-two-person மண்-சரிவு இருவர்-மீட்பு பரபரப்பு-சம்பவம் நாமக்கல்
By Nandhini Mar 25, 2022 07:43 AM GMT
Report

நாமக்கல் அருகே நல்லிபாளயத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டது. அப்போது திடீரென்று யாரும் எதிர்பாராத விதமாக மண் சரிந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் மண் குவியலில் இருவர் சிக்கிக்கொண்டனர். இதனையடுத்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுமார் 1 மணி நேரம் போராடி இருவரையும் உயிருடன் மீட்டனர். மீட்கப்பட்ட இருவரையும் போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மண் குவலையில் சிக்கிக்கொண்ட இருவரை உயிருடன் மீட்ட போலீசாருக்கும், தீயணைப்புத்தறையினருக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர். 

வேலையின்போது திடீரென மண் சரிந்து புதைந்த இருவர் - போராடி உயிருடன் மீட்ட பரபரப்பு சம்பவம் | Soil Collapsed Buried Two Person Exciting Incident