திறமையை நிரூபிப்பது விட்டுவிட்டு குறை கூறுவதை நிறுத்துங்கள்... முன்னாள் வீரருக்கு சோயப் அக்தர் கண்டனம்...

Mohammad amir Soiab akhtar
By Petchi Avudaiappan May 27, 2021 12:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

பாகிஸ்தான் அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற முகமது ஆமீருக்கு முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய முகமது ஆமீர் சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

பாகிஸ்தான் மேனேஜ்மென்ட் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தனக்கான வாய்ப்புகளை அளிக்க மறுப்பதாகவும், தன்னை ஓரம் கட்டுகிறார்கள் என்றும் கடுமையாக குற்றம் சாட்டினார். எனவே தான் ஓய்வு பெற்றதாகவும் முகமது அவர் தெரிவித்திருந்தார்.

திறமையை நிரூபிப்பது விட்டுவிட்டு குறை கூறுவதை நிறுத்துங்கள்... முன்னாள் வீரருக்கு சோயப் அக்தர் கண்டனம்... | Soiab Akthar Condemn To Mohammad Amir

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சோயப் அக்தர்முதலில் நீங்கள் நன்றாக விளையாடி உங்களுடைய திறமையை நிரூபிக்க வேண்டுமே தவிர டீம் மேனேஜ்மெண்ட் பயிற்சியாளர்களை குறை கூறக்கூடாது என்று கண்டித்துள்ளார்.