ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு - அலறிய பயணிகள்

Snake Flight
By Nandhini Dec 12, 2022 05:52 AM GMT
Report

துபாய்க்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருந்ததால் பயணிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து அலறினர்.

ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு

கடந்த சனிக்கிழமை, பி737-800 விமானம் கேரள மாநிலம் காலிகட்டிலிருந்து, துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று இருந்ததைப் பார்த்து பயணிகள் அலறினர். உடனடியாக பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர்.

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மூத்த அதிகாரி பேசுகையில்,

துபாய் விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது விமானத்தின் சரக்குக் கிடங்கில் பாம்பு ஒன்று காணப்பட்டது. உடனடியாக விமான நிலைய தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த பாம்பு பிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி உரிய அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

snake-on-air-india-flight