குழந்தைகள் சாப்பிடும் சத்துணவில் பாம்பு - 30 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட சத்துணவில் பாம்பு இருந்த நிலையில அதை சாப்பிட்ட 30 குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்துணவில் இருந்த பாம்பு
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் என்ற மாவட்டத்தில் மதிய உணவு சமைக்கும் போது பருப்பு மூட்டையை ஏற்றிவந்த கண்டைனர் (லாரியில்) தவறுதலாக பாம்பு ஒன்று இருந்துள்ளது.
இதனை கவனிக்காமல், சத்துணவு ஊழியர்கள் பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைத்து பரிமாறியுள்ளனர். இந்த சத்துணவை சாப்பிட்ட பள்ளி குழந்தைகளில் 30 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தாக்கி அவரது வாகனத்தை சேதப்படுத்தியதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.