ஏசிக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - கையை விட்ட முதியவர் பரிதாப பலி

chennai snake bite oldman death pallikaranai
By Anupriyamkumaresan Nov 15, 2021 01:52 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

சென்னை பள்ளிக்கரணையில் ஏசிக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு கடித்ததில் 66 வயது முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரழந்தார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த முதியவர் ஶ்ரீதரன் அவரது மனைவி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். ஶ்ரீதரன் வீட்டில் உள்ள ஏசியில் இருந்து இறந்துபோன எலி ஒன்று கட்டில் மேலே விழுந்துள்ளது. இதனால் ஶ்ரீதரன் அந்த ஏசியின் உள்ளே கையை விட்டு பார்த்துள்ளார்.

ஏசிக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - கையை விட்ட முதியவர் பரிதாப பலி | Snake In Ac Oldman Death By Snake Bite

அப்போது உள்ளே நல்லபாம்பு ஒன்று இருந்துள்ளது. அதை மின்சார வயர் என்று நினைத்து, கையை வைத்து இழுத்துள்ளார். உடனே உள்ளே இருந்த நல்லபாம்பு அவரது கையைக் கொத்தியுள்ளது.

பாம்பு கொத்தியதை அறிந்த வீட்டார், அவரை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவரை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஏசிக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு - கையை விட்ட முதியவர் பரிதாப பலி | Snake In Ac Oldman Death By Snake Bite

அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீதரன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வீட்டிலிருந்த பாம்பை பத்திரமாக மீட்டனர்.