இந்துக்களுக்கு அவர் ஸ்நேக் பாபுவாக உள்ளார் : சேகர்பாபு மீது கொந்தளித்த எச்.ராஜா
இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு ஸ்நேக் பாபுவாக இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா 9 மாதங்களாக கோவிலை சரி செய்யாமல் இருந்தது அறநிலையத்துறை அதிகாரிகள் செய்த தவறு. அதை செய்யாமல் இருந்ததால்தான் பொதுமக்கள் கையில் எடுத்தார்கள். தவறு என்றால் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டியதுதான்.
கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணம் எந்த பயன்பாட்டுக்காக வசூல் செய்தாரோ அந்த பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். கோவிலை புனரமைக்க அனுமதி கேட்டும் இதுவரை அனுமதி வழங்கவில்லை.
அப்படி இருக்கும் போது அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மாரிதாஸ், கிஷோர் கே. சாமி, கல்யாணராமன் வரிசையில் கார்த்திக் கோபிநாத் கைது நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்
தமிழக காவல்துறை இரண்டு மாதத்தில் 5 லாக்கப் டெத் நடத்திய கொலைகாரர்கள் கார்த்திக் கோபிநாத்தை எங்கு வைத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை என்று தெரிவித்த எச்.ராஜா இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்துக்களுக்கு ஸ்நேக் பாபுவாக இருப்பதால் மக்கள் போராட்டத்தின் மூலம் அறநிலையத் துறையில் இருந்து இந்து கோயில்கள் மீட்பதை தவிர இந்துக்களுக்கு வேறு வழி இல்லை என்று கூறினார்

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan
