கடித்த பாம்பை மருத்துவமனைக்கு துாக்கி வந்த நபர் - ஓட்டம் பிடித்த மக்கள்

People Attack Snake Fear Run
By Thahir Feb 07, 2022 07:11 AM GMT
Report

தன்னை பாம்பு கடித்து விட்டதாக கூறி அந்த பாம்பை கையில் மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பாலகிருஷ்ண நகரில் வசித்து வரும் தர்மன் என்பவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.

மதுபோதையில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தர்மனை சுமார் 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் பாம்பை கையில் துாக்கிய படி மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு துாக்கி வந்த நபர் - ஓட்டம் பிடித்த மக்கள் | Snake Attack Fear People Run Tamilnadu

இதைபார்த்த மருத்துவமனையில் கூடியிருந்தவர்கள் சிதறி ஓடின.மருத்துவரின் அறையினை நோக்கி சென்ற அவரை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தர்மனை கடித்த பாம்பு விஷத்தன்மை இல்லாததால் மருத்துவர் அவருக்கு மாத்திரைகளை வழங்கி அனுப்பி வைத்துள்ளார்.

அதன் பின்பும் தனது கையில் பாம்புடனே வீடு திரும்பினார் தர்மன். அவர் பாம்புடன் சுற்றி திரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

You May Like This