அறிமுகமாகும் ஸ்லீப்பர் கோச்; இந்தியாவை கலக்கும் வந்தே பாரத் - அசத்தல் புகைப்படங்கள்!
படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
வந்தே பாரத்
ஸ்லீப்பர் வெர்ஷன் மாடலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தயாரிக்கும் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன. படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான டெண்டரை பெங்களூருவில் உள்ள பி.இ.எம்.எல் (BEML - Bharat Earth Movers Limited) தொழிற்சாலை பெற்றுள்ளது.
675 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான வடிவமைப்பை உருவாக்கி தந்தது சென்னை ஐ.சி.எஃப் ரயில் பெட்டி தொழிற்சாலை. 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் படுக்கை வசதிகள் உடன் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
படுக்கை வசதி
அக்டோபர் 20ஆம் தேதி தயாராகி விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏசி 3 டயர் பெட்டிகள் 11, ஏசி 2 டயர் பெட்டிகள் 4 என மொத்தம் 15 பெட்டிகள் இருக்கும் எனத் தெரிகிறது.
அதுமட்டுமின்றி மிகவும் நவீன வடிவமைப்பு, பயணிகள் எளிதாக கையாளும் வசதிகள், மேல் படுக்கைக்கு செல்ல 6 படிக்கட்டுகள் கொண்ட கட்டமைப்பு, அகலமான ஜன்னல்கள், உலகத் தரம் வாய்ந்த உட்புற அமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்ப வசதி உள்ளிட்டவை இடம்பெறும்.