சிம்பு குறித்து கொளுத்தி போட்ட எஸ்.ஜே.சூர்யா - உற்சாகத்தில் ரசிகர்கள்

simbu maanadu ActorSTR sjsurya
By Petchi Avudaiappan Nov 20, 2021 07:15 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

மாநாடு பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிம்பு குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா கூறிய கருத்தால் சிம்பு ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். இதனைத் தவிர  எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

சிம்பு குறித்து கொளுத்தி போட்ட எஸ்.ஜே.சூர்யா - உற்சாகத்தில் ரசிகர்கள் | Sjsurya Said Simbu Become A Super Starsj

மாநாடு படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் பங்கேற்ற எஸ்.ஜே. சூர்யா மாநாடு படத்தின் ட்ரெண்டிங் வசனமான "வந்தான்... சுட்டான்... செத்தான்... ரிப்பீட்டு என்ற வசனத்தை தனக்கே உரிய ஸ்டைலில் பேசினார். இதற்கு ரசிகர்கள் விசிலடித்து பெரும் வரவேற்பு அளித்தனர். 

தொடர்ந்து பேசிய அவர், லிட்டில் சூப்பர் ஸ்டாரா இருந்து...யங் சூப்பர் ஸ்டாரா ஆகி இருக்கார். கூடிய சீக்கிரம் சூப்பர் ஸ்டாரா வரக்கூடிய அத்தனை தகுதிகளும் உள்ளவர் சிம்பு என்று புகழ்ந்து தள்ளினார். இதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.