கொடூரம்; 14வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை செய்த கும்பல் - வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு!
14 வயது சிறுமியை கட்டத்தில் பாலியல் தொல்லை செய்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை
6 பேர் கொண்ட கும்பல் ஒன்று சிறுமியை வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களை வெளியாகி வேகமாக பரவி வருகிறது. உத்திர பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ரஸூலாபாத் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் சிறுமி ஒருவரை வீட்டில் இருந்து கடத்தி சென்றுள்ளனர்.
அவர்கள் சிறுமியை அங்குள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று தாக்கி, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்வதை வீடியோவில் காண முடிகிறது. இவர்களின் பிடியிலிருந்து தப்பிக்க சிறுமி தொடர்ந்து முயற்சி செய்வதையும் வீடியோவில் காணலாம். ஆனால் அவர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளனர்.
சிறுமி அந்த ஆண்களிடம் சண்டையிட்டு தப்பிக்க முயற்சித்த போதும், அவர்கள் சிறுமியை கையை சுழற்றி பிடித்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் சிறுமி கத்த கூச்சலிட்டுள்ளார். அவரின் அழுகையையும், சத்தத்தையும் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள உள்ளூர் கிராம வாசிகள் அங்கு வருவதற்குள்.
அந்த பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த முழு சம்பவத்தையும் அவர்கள் போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகி வேகமாக பரவியுள்ளது. இந்த வீடியோவை இணையவாசிகள் பலரும் உத்திர பிரதேச போலீசாரை டேக் செய்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
குற்றவாளிகள் கைது
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் நேற்று (ஆகஸ்ட் 16ம் தேதி) போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 'ஆஷிஷ், விக்கி, கோர், பிரமோத், பப்பு மற்றும் ஷேஷ்மணி ஆகிய 6 போரையும் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களை கொன்று விடுவதாக மிரட்டியதால் தான் புகார் அளிக்காமல் இருந்தோம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.