தையல் மிஷினும் தர்றேன் ..மேல் படிப்புக்கு உதவியும் செய்கிறேன் : நெகிழ்ச்சியடைய வைத்த அமைச்சர்!
தையல் மிஷின் கேட்ட பெண்ணிடம் படிப்பின் அவசியத்தை உணர்த்தி மேற்படிப்புக்கு தான் உதவி செய்வதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதியளிக்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது திமுக .
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஒரு இளம்பெண்ணு.க்கு கொடுத்த வாக்குறுதியைதான் இணைய வாசிகள் பாராட்டி வருகின்றனர்.
12th வரை படிச்சிருக்கேன்
— யாரோ.. (@vetrikumar_) June 4, 2021
தையல் மிஷின் தாங்க
என்று உதவி கேட்ட நரிகுறவர்
பெண்ணிடம்.."காலம் முழுவதும்
தையல் மிஷினே வாழ்க்கையாகிடும்"
"தையல் மிஷினும்
தர்றேன்" மேல் படிப்புக்கு
உதவியும் செய்கிறேன்.."நன்றாக படித்து நாலு பேருக்கு முன்மாதிரியாக இரு..!
அமைச்சர் @sivasankar1ss
?♥️ pic.twitter.com/8juVWROyuN
குன்னம் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக உள்ள சிவ ச தொகுதி பணியில் ஈடுபட்டிருந்த அமைசங்கரிடம்: 12-ம் வகுப்பு வரை படித்துள்ளேன் தையல் மிஷின் தாங்க என்று நரிகுறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உதவிக் கேட்டுள்ளார்.
அதற்கு அந்தப் பெண்ணிடம் அமைச்சர்: காலம் முழுவதும் தையல் மிஷினே வாழ்க்கையாகிடும்.
தையல் மிஷினும் தர்றேன், மேல் படிப்புக்கு உதவியும் செய்கிறேன். நல்லா படிச்சு நாலு பேருக்கு முன் மாதிரியாக இரு என கூறியுள்ளார்.
இந்த வீடியோ பதிவை தான் இணைய வாசிகள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.