தேசிய விருது பெற்ற பிரபல பாடகர் காலமானார் - ரசிகர்கள் இரங்கல்

Death
By Nandhini Aug 12, 2022 07:20 AM GMT
Report

பிரபல கன்னட பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா (83) நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். இவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா

பெங்களூருவைச் சேர்ந்த சுப்பண்ணா, ‘ஞானபீட’ விருது பெற்ற கன்னட எழுத்தாளர். இவர் ‘குவேம்பு’ எழுதிய பாடல்களின் மூலம் பிரபலமானார்.

"காடு குதுரே" படத்தில் "காடு குதுரே ஓடி பந்திட்ட" என்ற பின்னணிப் பாடலுக்காக தேசிய விருது பெற்ற முதல் கன்னட பாடகர் இவர்தான்.

Sivamokka Subpanna

ஆகாஷ்வானி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் பாடகராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

கன்னட பாடகர் சிவமொக்கா சுப்பண்ணா மறைவிற்கு ரசிகர்களும், அரசியல் தலைவர்களும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.