சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து

thunder sivakasi fireworks fire factory
By Praveen May 07, 2021 05:06 PM GMT
Report

சிவகாசி அருகே உள்ள கீழ பெத்தலுபட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கியதில் தீ விபத்து.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கீழ பெத்தலுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகநாதன் இவர் அதே கிராமத்தில் கம்பி மத்தாப்பு ஆலை நடத்தி வருகிறார். இந்த பகுதியில் மழை பெய்ததால் ஆலைக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு மழை பெய்தபோது பட்டாசு ஆலையில் உள்ள குடோனில் மின்னல் தாக்கியதில் கட்டிடம் முழுவதும் விரிசல் விட்டு தீ பிடித்தது அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் அருகில் இருந்த அறைகளுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த பட்டாசு ஆலை விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.