2-வது குழந்தை பிறந்த பிறகு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப் போன சிவகார்த்திகேயன் மனைவி - தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் தன்னுடைய சொந்தக்கார பெண் ஆர்த்தியை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்திக்கும் 2-வதாக மகன் பிறந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன், 18 வருடங்கள் கழித்து என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என்று பதிவிட்டார்.
இந்தப் பதிவைப் பார்த்த இவரது ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கும், ஆர்த்திக்கும் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
அந்த புகைப்படத்தில், தன்னுடைய மனைவியுடன் வெளியே சென்றபோது சிலருடன் சேர்ந்து சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள், 2-வது குழந்தை பெற்ற பிறகு சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி உடல் எடை கூடி ஆளே மாறிவிட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி🙏 அம்மாவும் குழந்தையும் நலம்🙏👍❤️😊 pic.twitter.com/oETC9bh6dQ
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 12, 2021