பொய்க்கு நான் ஏன் விளக்கம் தரனும்; யார் சொன்னாலும் நிலைக்காது - சிவகார்த்திகேயன் பேட்டி!

Sivakarthikeyan D Imman
By Sumathi Oct 23, 2023 05:30 PM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு டி.இமானுக்குமான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

சர்ச்சையான விவகாரம் 

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டதாக டி.இமான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசியிருந்தார்.

d imman issue

அதன்பின், இமான் குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சரட் கூறுவதெல்லாம் பொய். தன் வீட்டிற்கு வந்த இமான் மற்றும் அவரது தந்தை சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக நடிகை குட்டி பத்மினி தெரிவித்திருந்தார்.

கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!

கள்ள உறவுலலாம் கல்யாணம் பண்ணல; வில்லன் யாருனு தெரியுமா? டி. இமான் பளீச்!

வைரலாகும் பேட்டி

இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த போது சிவகார்த்திகேயன் அளித்த பேட்டி ஒன்றில், “உங்களை பற்றி பொய் தகவல்கள் பரவும் போது எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? என்று கேட்கப்பட்டது.

sivakarthikeyan interview

அதற்கு அவர், நான் கூறியுள்ள விஷயம் மாற்றி வந்துள்ளது என்றால் அதை நான் மறுக்கலாம். ஆனால், அது முழுமையாக பொய்யாக இருக்கும் போது நான் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? பொய் என்று தெரிந்த ஒரு விஷயம் அதை எத்தனை பேர் பேசினாலும் நிலைக்காது.

ஒரு சிலர் அதை நம்பினாலும் அதுதான் உண்மை என்றெல்லாம் நிரூபிக்க முடியாது என்றுத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.  

You May Like This Video