சிவகங்கையில் பிரபல தனியார் உணவகத்தில் காலை உணவில் கிடந்த பல்லி - ஷாக்கான வாடிக்கையாளர்கள்...!
சிவகங்கை மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் காலை உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை உணவில் இறந்து கிடந்த பல்லி
சிவகங்கை மாவட்டம், அரண்மனைவாசல் பகுதியில் நவின் பாரடைஸ் என்ற தனியார் உணவகம் செயல்பட்டு வருகிறது. மிகவும் பிரபலமான இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்கள் வருகை எப்போதுமே அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், இன்று காலை வாடிக்கையாளர் ஒருவர் இந்த உணவகத்திற்கு வந்து காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் சாப்பிட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர்கள் உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசாரும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்திற்கு வந்து சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தனியார் உணவகத்தில் காலை உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan
