அண்ணியின் அந்தரங்க உறுப்பை தீயிட்டு கொளுத்திய கொழுந்தன் - உறவினர்களால் நேர்ந்த கொடூரச் சம்பவம்
மேற்கு வங்க மாநிலம், நம்கானா கிராமத்தைச் சேர்ந்த 40 வயது பெண் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இவர்களின் வீட்டு அருகே கணவரின் தம்பியும் மற்றும் உறவினர்களும் வசித்து வந்துள்ளனர்.
ஆனால், பெண்ணின் கணவருக்கும், தம்பிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால், ஆத்திரமடைந்த அப்பெண்ணின் கணவனின் தம்பி, அண்ணன் இல்லாத சமயம் பார்த்து, தன்னுடைய உறவுக்கார வாலிபர்களுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்தனர்.
அப்போது, வலுக்கட்டாயமாக அண்ணியை மேல் மாடிக்கு கொண்டு சென்று கொளுந்தனும், உறவுக்கார வாலிபர்களும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனையடுத்து, அண்ணியை தீ வைத்து கொளுத்த முடிவெடுத்தனர். கெரோசினை எடுத்து அப்பெண்ணின் அந்தரங்க பகுதியில் ஊற்றினார்கள். பின்னர், தீ வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயை அணைத்து உடனடியாக அப்பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சையளிகப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த குற்ற வழக்கு சம்பந்தமாக குற்றவாளிகள் இருவரை போலுசார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
அண்ணியையே பாலியல் பலாத்காரம் செய்து தீயிட்டு கொளுத்திய கொளுந்தனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.