அண்ணனைதான் திருமணம் செய்வேன் - அடம் பிடித்த தங்கை; அதிர்ந்த அண்ணி

Tamil nadu Marriage Vellore
By Karthikraja Sep 16, 2024 11:00 AM GMT
Report

அண்ணனைதான் திருமணம் செய்வேன் என தங்கை அடம்பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமண நிச்சயம்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் சிறு வயதிலே தந்தையை இழந்ததால் பெரியப்பா அரவணைப்பில் வளர்த்துள்ளார். 

vellore

இந்நிலையில் இளம்பெண்ணுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்து நிச்சயித்துள்ளனர். ஆனால் அவர் "எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. திருமணம் செய்யாமல், குடும்பத்தினருடனே இருந்துவிடுகிறேன்" என கூறி வந்துள்ளார். 

3 வருட காதல் - மருமகளை திருமணம் செய்த மாமியார்

3 வருட காதல் - மருமகளை திருமணம் செய்த மாமியார்

வீட்டை விட்டு ஓட்டம்

ஆனால் அதை பொருட்படுத்தாத குடும்பத்தினர், திருமண தேதியை குறிக்க இரு குடும்பத்தினரும் ஜோதிடரிடம் சென்றுள்ளனர். இதற்கிடையில் வெளியே சென்ற இளம்பெண்ணும், அவரது அண்ணனும் (பெரியப்பா மகன்) இரவு வீடு திரும்பவில்லை. 

vellore brother sister run

குடும்பத்தினர் போன் செய்தபோது, இருவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்திய போது திடீரென இருவரும் செல்போனை ஆன் செய்துள்ளனர். இதில் இருவரும் திருவண்ணாமலையில் இருப்பது தெரியவந்த போது உடனடியாக அங்கு சென்று இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்தனர்.

கதறிய அண்ணி

விசாரணையில், அண்ணன் முறையான பெரியப்பா மகனை திருமணம் செய்து கொள்ள தான் அவருடன் சென்றேன். நாங்கள் உயிருக்கு உயிராக காதலிக்கிறோம், எங்களுக்கு திருமணம் செய்து வைத்துவிடுங்கள் என கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், அறிவுரைகள் வழங்கியும் இளம்பெண் அதை ஏற்க மறுத்து அடம்பிடித்துள்ளார்.

வேறு வழியில்லாத காவல் துறையினர் அண்ணனுடன் திருமணம் செய்வது தவறு என அறிவுரை வழங்கி விட்டு, பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவரை யாருக்கும் திருமணம் செய்து வைக்க கூடாது என குடும்பத்தினருக்கு தெரிவித்தனர்.

அவரது அண்ணனுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணமாகி, தற்போது வரை குழந்தைகள் இல்லை. இளம்பெண் கூறியதை கேட்ட அவரது அண்ணி, ‘என் வாழ்க்கை பறிபோய்விட்டதே’ என கதறி அழுதுள்ளார். அண்ணனை திருமணம் செய்ய தங்கை அடம்பிடிப்பது அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.