பதவியேற்ற முதல் நாளே சிக்கலில் சிக்கிய ரணில் விக்கிரமசிங்க - என்ன நடந்தது?

Gotabaya Rajapaksa Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Petchi Avudaiappan May 13, 2022 04:43 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற முதல் நாளே சர்ச்சை கிளம்பியுள்ளது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதால் அங்கு கலவரம் வெடித்தது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களால் அதிகாலையில் எம்.பி.க்கள் உள்பட 35 அரசியல்வாதிகளின் வீட்டை தீவைத்து கொளுத்தப்பட்டது. இதில் ராஜபக்சவின் பூர்வீக பழைய வீடும் தீக்கிரையானது. அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகள், மருந்து தட்டுப்பாட்டால் அந்நாட்டில் மக்கள் வாழ்வதே கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதற்கிடையில் இலங்கையில் அமலில் உள்ள ஊரடங்கு மே 13 ஆம் தேதி வரை தொடரும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 7 மணி முதல் பகல் 2 மணி வரை பொதுமக்கள் வெளியில் செல்லலாம் என்றும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய கோட்டாயப ராஜபக்‌ச இலங்கையில் ராஜபக்‌சக்கள் இல்லாத இளைஞர்களை கொண்ட புதிய அரசு அமையும் என உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நேற்று பதவியேற்றார். 6வது முறையாக பிரதமராக பதவியேற்ற அவர் முதல் நாளிலேயே சர்ச்சையை சந்தித்துள்ளார். அதாவது 2020 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் இலங்கையில் மாறி மாறி ஆட்சி அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டும் படுதோல்வியை சந்தித்தன. அதாவது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு ஒரு இடம் கிடைத்த நிலையில், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. 

ஆனால் நியமன எம்.பிக்கள் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்கே எம்.பி.யானார். நாடாளுமன்றத்தில் ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரே ஒரு எம்.பி.தான் உள்ளனர். அதுவும் ரணில் மட்டும் தான். இப்படியான நிலையில் வரலாற்றிலேயே ஒற்றை எம்.பி.யை கொண்ட ஒரு கட்சிக்கு பிரதமர் பதவி இலங்கையில்தான் வழங்கப்பட்டுள்ளது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் தோற்றுப் போனவர். எனவே இந்த பிரதமர் நியமனம் கடும் சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.