15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி - ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசயம் - நெகிழ்ச்சி சம்பவம்

Born single-delivery 4 babies Flexibility-incident
By Nandhini Feb 17, 2022 09:58 AM GMT
Report

கேரளாவைச் சேர்ந்த தம்பதியருக்கு 15 ஆண்டுகள் கழித்து ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மனைவி பிரசன்ன குமாரி. இவர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், 15 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை.

இருவரும் குழந்தை பேறு இல்லாமல் மிகுந்த மனவருத்தத்தில் இருந்து வந்தனர். பல மருத்துவர்களிடம் சென்றும் எந்தப்பலனும் இல்லை. இந்நிலையில், பிரசன்ன குமாரி வேலை செய்யும் தூய்மைப்பணியாளராக பணியாற்றும் கரிட்டஸ் (Caritas))மருத்துவமனையில் குழந்தை பேறுக்காக சிகிச்சைப் பெற்றார்.

அங்கு வழங்கிய சிகிச்சையின் மூலம் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது. 4 குழந்தைகளில் 3 ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. தற்போது 4 குழந்தைகள் பிறந்துள்ளதால் சந்தோஷத்தில் துள்ளி குதிக்கிறார் கணவர் சுரேஷ்.

15 ஆண்டுகளாக குழந்தை இல்லாத தம்பதி - ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசயம் - நெகிழ்ச்சி சம்பவம் | Single Delivery 4 Babies Born Flexibility Incident

இது குறித்து கணவர் சுரேஷ் கூறுகையில்,

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் என் தோள்பட்டை முறிவால் பாதிக்கப்பட்டது. வேலைக்கு ஏதும் செல்லாமல் சிரமப்பட்டு வந்தேன். குழந்தை பேறு வேண்டி என்னுடைய வீட்டை அடமானம் வைத்து ரூ.5 லட்சம் வரை செலவழித்தேன். தற்போது எனக்கு 4 குழந்தைகள் பிறந்துள்ளதை நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

பெண் குழந்தைக்கு சுரேஷின் அம்மாவின் பெயரான லட்சுமி என்று வைத்துள்ளார். மற்ற 3 ஆண்குழந்தைகளுக்கும், சங்கரன், காசிநாதன், கார்த்திக் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்ததையடுத்து, உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் குழந்தையை வந்து பார்த்து, தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.