பாடகர் பம்பா பாக்யாவின் நிறைவேறாமல் போன கடைசி ஆசை - ரசிகர்கள் வேதனை
உயிரிழந்த பாடகர் பம்பா பாக்யாவின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது அவரின் ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் பாடகர் உயிரிழப்பு
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ராவணன் திரைப்படத்தில் இடம்பெற்ற கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் மூலம் அறிமுகமானவர் பாடகர் பம்யா பாக்யா.இவர் எந்திரன் 2.0 படத்தில் புள்ளினங்கால் பாடலின் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
தொடர்ந்து அவர் சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் படங்களிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடிய அவர் தொடர்ந்து பல பாடல்களை பாடி பெருமளவில் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
நிறைவேறாமல் போன கடைசி ஆசை
அவரின் உயிரிழப்பு திரையுலகை மட்டுமின்றி சினிமா ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடகர் பம்பா பாக்யா தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.
அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் படத்தில் பாட வேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் அவரின் ஆசை நிறைவேறாமல் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தனது கடைசி ஆசை நிறைவேறாமல் உயிரிழந்ததால் அவரது ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்துள்ளனர்.