மகத்தான சாதனை படைத்த சிம்புவின் ‘மாநாடு’ - ட்விட்டரில் முக்கிய தகவலை பகிர்ந்த தயாரிப்பாளர் ; ரசிகர்கள் மகிழ்ச்சி!
நடிகர் சிம்பு நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த மாநாடு திரைப்படம் தற்போது புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் சிம்புவுடன் இணைந்து நடித்திருந்தனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மாநாடு படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்தார். இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25-ம் தேதி வெளியானது.
படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்தது. சிம்பு படங்களில் நீண்ட நாட்களாக வேறெந்த படமும் வெளியாகமல் இருந்துவந்த நிலையில் மாநாடு ரிலீஸ் ஆகி ரூ.100 கோடி வசூலை பெற்றது.
Glad to announce that our #Maanaadu has collected 117Cr at Worldwide Box Office. It becomes this year's Mega Blockbuster. I thank @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @thisisysr @kalyanipriyan @Cinemainmygenes @Richardmnathan @silvastunt @UmeshJKumar @johnmediamanagr
— sureshkamatchi (@sureshkamatchi) May 30, 2022
தற்போது இந்தப் படம், 117 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"இந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாநாடு படம் அமைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.