‘’நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’’ - ரிலீஸ் ஆனது சிம்புவின் மாநாடு , ரசிகர்கள் கொண்டாட்டம்
தமிழில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு, வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த் திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
படத்தில் சிம்புவுடன் நடிகர்கள் கல்யாணி பிரியதர்ஷன் எஸ். ஜே. சூர்யா, பாரதிராஜா, எஸ். ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி அமரன் என ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படம் டைம் லூப் கான்சேப்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவந்த நிலையில் பெரும் தடைகள் மற்றும் நெருக்கடிகளை கடந்து நவம்பர் 25-ந் தேதியான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் பெரும் ஆவலுடன் படம் பார்க்க காத்திருந்த ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது எனத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேற்றிரவு அறிவித்தார்.
இருப்பினும், அடுத்த சில மணி நேரங்களிலேயே படம் திட்மிடப்படி வெளியாகும் எனப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவும், மற்றொரு தயாரிப்பாளரான JSK Film corporationஇன் சதீஷ்குமாரும் ட்வீட் செய்தனர்.
இப்படி பல இன்னல்களை கடந்து இன்று திரையரங்குகளில் மாநாடு திரைப்படம் வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
காலை முதலே திரையரங்கு வாசல்களில் குவிந்த ரசிகர்களுக்கு 5 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டது வருத்தமான செய்தியாக இருந்தாலும் சிம்புவிற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து 8 மணி காட்சியை பார்த்து வெளியில் வந்து படம் கொல மாஸ், வேற லெவல் என கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.