எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்... பிசிசிஐ- யிடம் கேட்கும் இந்திய அணியின் இளம் வீரர்...

BCCI Siddharth kaul
By Petchi Avudaiappan May 30, 2021 10:21 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இலங்கைக்கு எதிரான தொடரில் தனக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் இளம் வீரர் சித்தார்த் கௌல் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.அதே சமயத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளதால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்திற்கும், இளம் இந்திய படையை இலங்கைக்கும் அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் தனக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக அணியின் இளம் பந்துவீச்சாளர் சித்தார்த் கௌல் தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் தான், இந்த தொடருக்காக தன்னை தயார்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.