சுப்மன் கில்லுக்கு பதிலாக இவருக்கு வாய்ப்பு கொடுங்க... - பாக். முன்னாள் வீரர் கருத்து...!
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷாவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலியின் சாதனையை முறியடித்த சுப்மன் கில்
சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து நட்சத்திர நாயகனாக மாறினார்.
இதனையடுத்து, இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்றது. இப்போட்டியில் முதல் ஆட்டக்காரராக களமிறங்கிய 78 பந்துகளில் 112 ரன்களை குவித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.
சுப்மன் கில் 112 ரன்கள் மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 143.59 உடன் விராட் கோலியின் 11 ஆண்டுகால சாதனையை இவர் முறியடித்து உலக சாதனை படைத்தார்.
அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் உலக சாதனையையும் சமன் செய்துள்ளார் ஷுப்மன் கில். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மொத்தம் 360 ரன்கள் எடுத்து மாஸ் காட்டியுள்ளார்.
இவருக்கு வாய்ப்பு கொடுங்க - பாக். முன்னாள் வீரர்
இந்நிலையில், நாளை நடக்கும் கடைசி டி20 போட்டியில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில்லுக்கு பதிலாக, பிரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், இது கடைசி ஆட்டம். சுப்மன் கில் எப்படி விளையாடுகிறார் என்று நீங்கள் பார்த்திருப்பீர்கள். பிரித்வி ஷா ஒரு அற்புதமான இளம் கிரிக்கெட் வீரரார். அவரது அதிரடி ஆட்டத்துக்கு அவர் பெயர் பெற்றவர்.
நீங்கள் அவருக்கு சுப்மன் கில் இடத்தில் வாய்ப்பு கொடுங்கள். ஷாவுக்கு திறமை உள்ளது. இவருக்கு வாய்ப்பு கொடுத்தால், கண்டிப்பாக அவரது திறமையை வெளிப்படுத்துவார். சுப்மன் கில் ஒரு சிறந்த ஆட்டக்காரர்தான்.
ஆனால், அவரது பேட்டிங்கில் சில குறைகள் உள்ளது. அவர் சுழற்பந்து வீச்சு மற்றும் பவுன்ஸ் பந்துகள் போடும் போது தனது ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்த மேலும் உழைக்க வேண்டும் என்றார்.