ஷுப்மான் கில் அரைசதம் : மூன்று விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் மயங்க் அகர்வால், ஷுப்மான கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அணியின் ஸ்கோர் 21 ரன்னாக இருக்கும்போது மயங்க் அகர்வால் 13 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் இறங்கினார். ஒருபக்கம் புஜாரா நிலைத்து நிற்க, மறுபக்கம் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 81 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 29 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்தது.
தற்போது கேப்டன் ரகானே மற்றும் புஜாரே ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சற்று முன் வரை 44.2 வர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.