எனக்கா ஓட்டு போட்டா : டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி
ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கிறது.
ஜல்லிக்கட்டு தடை
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கர்நாடகாவில் கம்பளா, மகாராஷ்டிராவில் சக்கடி ஆகிய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு சட்டங்களை இயற்றியுள்ளன. இந்த சட்டங்களுக்கு எதிராகவும், விலங்குகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
தீர்ப்பு இன்று
போதிய மருத்துவமனை இல்லை என முறையிட்ட மக்களிடம் எங்களுக்கு ஒட்டு போட்டியா? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இதுவரை 14 பேர் விஷ சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
இதனை வழங்குவதற்காக எக்கியார்குப்பம் கிராமத்திற்கு அமைச்சர் பொன்முடி, செஞ்சி மஸ்தான் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது மீனவ கிராம மக்கள் போதிய மருத்துவமனை இல்லை என முறையிட்டனர். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடி எங்களுக்கு ஒட்டு போட்டியா? என கேள்வி கேட்டது சூழ்ந்திருந்த மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.