இலங்கை: பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள் - பாதுகாப்பு அமைச்சகம்

Sri Lanka Police Gotabaya Rajapaksa Sri Lankan protests
By Swetha Subash May 10, 2022 02:14 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இலங்கை
Report

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளாகிய பொதுமக்கள் அரசிற்கு எதிராக கடும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை: பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள் - பாதுகாப்பு அமைச்சகம் | Shoot At Sight Order Given In Srilanka Protest

கடும் பொருளாதார நெருக்கடிக்கு நீங்கள் தான் காரணம் எனவே அதிபர் கோத்தபய ராஜபக்சே,பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக கோரி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒரு மாதமாக நீடித்து வரும் போராட்டங்களை கட்டுப்படுத்த அவசர நிலை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொருளாதார நெறுக்கடியால் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். 

இலங்கை: பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள் - பாதுகாப்பு அமைச்சகம் | Shoot At Sight Order Given In Srilanka Protest

அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது, பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, நாடு முழுதும் கலவரம் வெடித்தது. இதில், 130 பேர் காயம் அடைந்தனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போலீசாருக்கு உதவ, ராணுவம் களம் இறக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதமர் பதவியில் இருப்போர் தங்குவதற்கான சொகுசு மாளிகையான அலரி மாளிகையிலிருந்து ராஜபக்சே இன்று அதிகாலை பலத்த பாதுகாப்புடன் வெளியேறினார். இதனை தொடர்ந்து அவரது குடும்பம் வெளிநாடு தப்பிச்செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர்கள் ஜெட் படகு மூலம் சோபர் தீவுக்கு தப்பித்து சென்றுவிட்டதாக ஆடியோ ஒன்று இணையத்தில் வட்டமடிக்க தொடங்கியது.

இலங்கை: பொது மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்தினால் கண்டதும் சுட்டுத்தள்ளுங்கள் - பாதுகாப்பு அமைச்சகம் | Shoot At Sight Order Given In Srilanka Protest

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு இலங்கை முழுவதும் கலவர பூமியாக மாறியுள்ளது. கொழும்புவில் நடைபெற்று வந்த போராட்டமானது வன்முறையாக மாறி நாடு முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அமைதி காக்குமாறும் வன்முறையை நிறுத்துமாறும் அதிபா் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளாா். 

இதற்கிடையில் மேற்கு மாகாணத்தில் மல்வனை பகுதியில் உள்ள பசில் ராஜபக்சே வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் காவல்துறை தலைமை பொறுப்பில் உள்ள சீனியர் டிஐஜி தேசபந்து தென்னகோன் ஜீப்பில் சென்றபோது பொதுமக்கள் தடுத்து நிறுத்தி தாக்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் அசாதரண சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், பொது மற்றும் தனியார் சொத்துக்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினால் கண்டதும் சுட்டுத்தள்ளலாம் என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அதிரடியாக அறிவித்துள்ளது.