சிவனால் கூட சிவசேனாவை காப்பாற்ற முடியாது: கங்கனா ரனாவத் கிண்டல்

Shiv Sena Kangana Ranaut
By Irumporai Jun 30, 2022 08:29 AM GMT
Report

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டிருந்தார்.

கங்கனா கிண்டல்

இந்தச் சூழலில் நேற்று இரவு திடீரென்று உத்தவ் தாக்கரே தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “1975 ஆம் ஆண்டிற்கு பிறகு தற்போது வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள். 1975ஆம் ஆண்டு மக்கள் தலைவர் ஜெய்பிரகாஷ் நாராயணனின் வார்த்தைகள் அதிகாரவர்க்கத்தை ஆட்டியது. அதன்பின்னர் 2020 ஆம் ஆண்டு நான், “ மக்களாட்சி ஒரு சத்தியம்.

சிவனாலும் சிவசேனாவை காப்பாற்ற முடியாது

அந்தச் சத்தியத்தை உடைப்பவர்கள் நிச்சயம் அழிந்துவிடுவார்கள் என்று கூறினேன். அதேபோல் சிவனின் 12-வது அவதாரமாக ஹனுமான் கருதப்படுகிறார். ஹனுமானின் சாலிசாவை பாட அனுமதி வழங்காத சிவசேனாவை சிவனால் கூட காப்பாற்ற முடியாது எனக் கூறியுள்ளார்.