எனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்... ஷிகர் தவான் நெகிழ்ச்சி...
இலங்கைக்கு எதிரான இளம் இந்தியப் படையின் கேப்டனாக வாய்ப்பு கிடைத்தது என்னுடைய கௌரவம் என ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான சீனியர் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய 2ம் தர இந்திய அணி இலங்கைக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் சென்றுள்ளது.
இதனிடையே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது என்னுடைய மிகப்பெரும் சாதனை மேலும் ஒரு கேப்டனாக நான் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்துவேன், குறிப்பாக அணியில் விளையாடும் வீரர்களை ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் வைத்துக்கொள்வேன்.
மேலும் இளம் வீரர்களுக்கு தங்களது கனவை பூர்த்தி செய்யும் வகையில் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துவிட்டது அதை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தவான் தெரிவித்தார்.