சச்சின் மட்டும் அன்னைக்கு சொல்லன்னா நான் என்னைக்கோ? - ரகசியம் சொன்ன சேவாக்

Sachin Tendulkar Virender Sehwag
By Irumporai Jun 01, 2022 01:38 PM GMT
Report

2008 லேயே ஒய்வுபெற நினைத்தேன் ஆனால் சச்சின் தனது முடிவினை மாற்றினார் என சேவாக் தெரிவித்துள்ளார்.

வீரேந்தர் சேவாக் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் , சில தருணங்களில் இந்திய அணி தடுமாறிய போது எதிர் அணியினை கலங்கடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தவர். சேவாக் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற்று 7 ஆண்டுகள் முடிந்துவிட்டது என்பதை யராலும் மறந்துவிடமுடியாது.

இந்த நிலையில் சமிபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த சேவாக் தான் 2008 லேயே கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெற நினைத்தாக கூறியுள்ளார். 2008ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.

சச்சின் மட்டும் அன்னைக்கு சொல்லன்னா நான் என்னைக்கோ? -  ரகசியம் சொன்ன சேவாக் | Shewag Sachin Change My Thought To Retirement

அந்த சமயத்தில் தான் இந்த எண்ணம் என்னுள் தோன்றியதாகவும் . 3 அல்லது 4 ஒருநாள் போட்டிகளில் ஒழுங்காக விளையாடாத காரணத்தால், தோனி தன்னை அணியில் இருந்து விலக்கியதன் காரணமாக ,ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டும் விளையாடலாமா என்று எண்ணியதாகவும்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் சச்சின் தான் இது உங்கள் வாழ்க்கையின் மோசமான காலகட்டம். கொஞ்சம் பொறுத்திருங்கள். இந்த பயணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள். நன்றாக சிந்தியுங்கள்.

என்ன செய்யலாம் என்று பிறகு முடிவெடுங்கள் என்று சச்சின் டெண்டுல்கர் கூறியதாகவும், சச்சின் இல்லாமல் இருந்திருந்தால் ஓய்வு முடிவை அறிவித்திருப்பேன் என்று கூறியுள்ளார்.