முன்னாள் காதலியின் திருமணத்திற்கு சல்மான் கான் செய்த செயல்
ராஜஸ்தானில் நடக்கும் நடிகை கத்ரீனா கைஃபின் திருமணத்திற்கு சல்மான் தரப்பில் செய்யப்படும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் காதலித்து வந்த நிலையில் காதலை வீட்டில் சொல்லி பெற்றோரின் ஆசியுடன் டிசம்பர் 9ம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் சொகுசு ரிசார்ட்டில் அவர்களின் திருமணம் நடக்கிறது. இதற்காக 120 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வுக்கு கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லை.
ஆனால் ஜெய்பூரில் நடக்கும் கத்ரீனாவின் திருமணத்திற்கு சல்மான் கானின் பாதுகாவலரான ஷேராவின் குழு தான் பாதுகாப்பு அளிக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
திருமண நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து ஷேராவின் டைகர் செக்யூரிட்டி குழுவுடன் சந்திப்பு நடந்ததில் திருமணத்திற்கு வரும் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது, செல்ஃபி எடுக்கக் கூடாது என்று ஏகப்பட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கத்ரீனா கைஃப் தற்போது சல்மான்கானுடன் சேர்ந்து டைகர் 3 படத்தில் நடித்து வந்தார். திருமணம் முடிந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அழைக்காவிட்டாலும் தன்னுடைய பாதுகாவலர் குழுவை முன்னாள் காதலி திருமணத்திற்கு கொடுக்க பெரிய மனது வேண்டும் என சல்மான்கானின் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.