காதலியின் மடியில் தலைவைத்து தூங்கியபடி இறந்த நடிகர் - ரசிகர்கள் கண்ணீர்

shehnaazgill sidharthshukla
By Petchi Avudaiappan Sep 03, 2021 09:18 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in வதந்திகள்
Report

சித்தார்த் சுக்லாவின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரது காதலியும் நடிகையுமான ஷெஹ்னாஸ் கில் தெரிவித்துள்ள தகவலால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்த சித்தார்த் சுக்லா நேற்று முன்தினம் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். 40 வயதான அவர் பிக்பாஸ் 13வது சீசனில் கலந்துக் கொண்டு டைட்டில் வென்றார். அதன்பிறகு பாலிவுட் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்த நிலையில் சித்தார்த் சுக்லா உயிரிழந்துள்ளார்.

அவரும் நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் காதலித்து வந்தனர். இந்நிலையில் சித்தார்த் சுக்லாவின் மரணத்தால் கில் பேரதிர்ச்சியில் அடைந்துள்ளார். இதனிடையே அவர் இறப்பதற்கு முந்தைய நாள் இரவு என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது.

இரவு 9.30 மணி அளவில் வீட்டிற்கு வந்த சித்தார்த் சுக்லா வீட்டிற்குள் நுழைந்ததும் தனக்கு ஏதோ மாதிரியாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு அம்மாவும், ஷெஹ்னாஸும் சேர்ந்து லெமன் ஜூஸும், ஐஸ்க்ரீமும் கொடுத்து ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

தூங்க முடியாமல் அவதிப்பட்ட அவர் காதலி கில்லை அருகில் இருக்குமாறு கூறியுள்ளார். இரவு 1.30 மணி அளவில் சித்தார்த் ஷெஹ்னாஸின் மடியில் தலை வைத்து தூங்கியிருக்கிறார். அதன்பிறகு காலை 7 மணிக்கு கில் எழுந்து பார்த்தபோது அவர் அசையாமல் கிடந்துள்ளார்.

இதனால் பயந்துபோன அவரின் குடும்பத்தார் மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்த போது தான் சித்தார்த் இறந்துவிட்டது தெரிய வந்தது. இந்த தகவலை கேட்ட அவரின் சோகத்தில் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.