ஷவர்மா ஏன் பாய்சனாக மாறுகிறதுன்னு தெரியுமா? அறிந்து கொள்வோம்

Shawarma
By Nandhini May 06, 2022 01:12 PM GMT
Report

கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் மாணவியின் மரணத்திற்கு அசுத்தமான உணவு மற்றும் நீரில் பரவக்கூடிய ஷிகெல்லா பாக்டீரியா தான் காரணம் என்றும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் பிரவீன் (22), பரிமலேஸ்வரன் (21), மணிகண்டன் (21) ஆகிய 3 பேர் மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உணவு ஒவ்வாமையே இந்த பாதிப்புக்கு காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஷவர்மா ஏன் திடீர் என்று பாய்சனாக மாறுகிறது என்பதை கவனிப்போம் -

உணவுகளில், கலக்கப்படும் கெமிக்கல், மற்றும் அதை சமைக்க பயன்படுத்தப்படும் சுத்தமில்லாத தண்ணீர் தான் நாம் உடலை பாதிக்குள்ளாக்குகின்றன.

மேலும், உணவுப் பொருட்களை மோசமான இடங்களில் வைக்கவேகூடாது. கெட்டுப்போன உணவுகளை சாப்பிடுவது உங்கள் வயிற்றிலிருந்து மூளை, நரம்பு மண்டலத்தை கூட பாதித்து விடும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

முதலில் ஷவர்மா சாப்பிட்ட பிறகு, உடல் நிலை மோசமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்வது அவசியம்.

ஷவர்மா சாப்பிட்ட பிறகு, வாந்தி, தலை சுற்றல், பேதி, வயிறு வலி, உடல் வலி, பசியின்மை, செரிமான பிரச்சனை, காய்ச்சல், தலைவலி, மயக்கம், மலத்தில் ரத்தம் செல்வது. மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை உணவு பாய்சனால் ஏற்படுகின்றன.

வைரஸ் அதேப்போன்று Norwalk, norovirus, sapovirus, rotavirus மற்றும் astrovirus போன்ற வைரஸ்கள் உணவில் காணப்பட்டாலும் அவையும் உணவு பாய்சனை ஏற்படுத்தும்.

எச்சரிக்கை உணவுகளை சாப்பிடும்போது ஏதாவது வித்தியாசமாக இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக அந்த உணவை நாம் சாப்பிடவே கூடாது. தவிர்த்து விடுவது நல்லது.

மேலும், அந்த உணவகம் சுத்தமாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். குடிக்கும் நீர், மற்றும் சாப்பிடும் இடங்களில் பாக்டீரியா இல்லாத சுத்தமான இடங்களாக தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.

ஷவர்மா ஏன் பாய்சனாக மாறுகிறதுன்னு தெரியுமா? அறிந்து கொள்வோம் | Shawarma