ஷர்மிகாவை நான் திட்டியபோது எல்லாரும் என்னை திட்டினாங்க..ஆனால் இப்போ - சின்மயி ஆதங்கம்
டாக்டர் ஷர்மிகா விவகாரம் குறித்து சின்மயி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஷர்மிகா
டாக்டர் ஷர்மிகா கூறிய பல நெறிமுறைகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும். தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்.
நம்மளவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் பண்ணமுடியாது.பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
சின்மயி ஆதங்கம்
இந்நிலையில், பாடகி சின்மயி ”கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் ஒரு ரியாக்ஷன் வீடியோ அப்லோட் பண்ணி இருந்தேன். “நமது தோலே பெரிய வாய். அதில் கெமிக்கல்களை போடக்கூடாது, ஷாம்பூ போடக்கூடாது ரத்தத்தில் கலந்துவிடும்” என ஷர்மிகா பேசியிருந்தார்.
[
அவரை அப்போது நான் விமர்சித்தபோது என்னை மிக மோசமான விமர்சித்தார்கள். ஆனால் இப்போது பலரும் அவரது வீடியோக்களை எடுத்து பகிர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். நான் அவரை விமர்சித்தபோது நான் ஏதோ பாவம் செய்தது போல் என்னைத் திட்டனார்கள். நான் சமீபத்தில் ஷர்மிகாவின் மற்றொரு வீடியோவைப் பார்த்தேன்.
”நீங்கள் நல்லவரா இருந்தால் குழந்தை பிறக்கும், கெட்டவரா இருந்தால் பிறக்காது” எனப் பேசியுள்ளார். எனக்கு தெரிஞ்சு பாலியல் வன்முறையில் ஈடுபட்டவர், ரேப்பிஸ்ட், குழந்தைகளை பாலியல் வன்முறை செயதவர்களுக்கு எல்லாம் குழந்தை பிறக்கிறது.
இதில் வியப்பு என்னவென்றால், என்னை அப்போது மோசமாக விமர்சித்து விட்டு தற்போது இப்போது ஷர்மிகாவை பல யூட்யூப் சானல்கள் சுட்டிக்காட்டுகிறேன் என போட்டிபோட்டு விமர்சித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் பார்த்திபன் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan
