சோகத்துல இருந்தோம்..ஆனா மோடி..! ஷமி பகிர்நதக்கொண்ட தகவல்..!
உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு மோடி தங்களை பார்க்க வருவதாக யாரும் கூறவில்லை என முகமது ஷமி பேசியிருக்கிறார்.
உலக்கோப்பை தோல்வி
கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா அணி அடைந்த தோல்வி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மனதை விட்டு இன்னும் நீங்காமல் உள்ளது.
கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையை கண்டிப்பாக வென்று விடலாம் என நினைத்த ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். தற்போது தென்னாப்பிரிக்கா தொடர் நடந்து வரும் நிலையில் முகமது ஷமி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகினார்.
சமீபத்தில் முகமது ஷமி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் உலககோப்பை தோல்வி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
மோடி வருவார்'னு
அதில் உலக கோப்பையை நாங்கள் இழந்தபோது ஒட்டுமொத்த தேசமே ஏமாற்றம் அடைந்ததாக கூறி, நாங்கள் அந்த தொடர் இறுதி வரை எங்களுடைய 100 சதவீத உழைப்பை வெளிப்படுத்தினோம் என்றும் தொடர் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்ததாக கூறினார்.
இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு எங்கள் மனம் உடைந்து இருந்த நிலையில் அந்த தருணத்தில் தான் பிரதமர் மோடி எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்ததை குறிப்பிட்ட அவர், அவர் வரும்போது நாம் கொஞ்சம் மரியாதை கொடுத்து நிற்க வேண்டும்.
ஆனால், எங்களை பார்க்க வருகிறார் என்று யாருமே சொல்லவில்லை என்றும் திடீரென்று அவர் ரூமிற்கு வந்து விட்டார் என்றார்.