இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுபவமே இல்லை... - பிசிசிஐக்கு அப்ரிடி கண்டனம்...!
இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அனுபவமே இல்லை என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
T20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்பேன் உள்பட 7 நகரங்களில் நடக்கும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா சந்தித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2023ம் ஆண்டின் ஆசிய கோப்பை தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது. மேலும், வேறு ஒரு பொதுவான இடத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்படும் என்று ஜெய்ஷா தெரிவித்தார்.
இவரின் இந்த பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் அணி முன்னாள் வீர்ரகள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஷாகித் அப்ரிடி கண்டனம்
இந்நிலையில் இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பேசுகையில், கடந்த 12 மாதங்களில் பாகிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே சிறந்த தோழமை ஏற்படுத்தப்பட்டு, 2 நாடுகளில் நல்ல உணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், டி20 உலக கோப்பை போட்டிக்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஏன் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். இது... இந்தியாவில் கிரிக்கெட் நிர்வாக அனுபவம் இல்லாததை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.