சரக்கு வியாபாரத்தை ஆரம்பித்த ஷாருக்கான் மகன் ? வெளியான அதிர்ச்சி தகவல்

Irumporai
in பிரபலங்கள்Report this article
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு மகனை மீட்டெடுத்தார் ஷாருக்கான்
ஷாருக்கான் மகன்
இந்நிலையில், ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் புதிதாக D'YAVOL எனும் பிராண்டை ஆரம்பித்துள்ளார். அதற்காக டிவி நடிகைகள் மற்றும் பாலிவுட் பிரபலங்களுக்கு அவர் பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் வெளியான நிலையில், ஆர்யன் கானை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் சிக்கித்தான் ஆர்யன் கானை ஷாருக்கான் ஜாமினில் எடுத்தார். ஆனால், தற்போது புதிதாக சரக்கு பிராண்டை வேற ஆரம்பித்து இப்படி நடிகைகளுடன் லூட்டி அடிக்கிறாரே எங்கே போய் சிக்கப் போகிறாரோ என நெட்டிசன்கள் ஆர்யன் கானை விளாசி வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் 10 கோடி ரூபாய்க்கு ரோல்ஸ் ராய்ஸ் 555 கார் வாங்கிய நிலையில், அந்த காரையும் ஆர்யன் கான் தான் பயன்படுத்தி வருகிறார் என்றும் மகனுக்காகவே ஷாருக்கான் இந்த படத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.