இவ்வளவு கோடியா...? வெளியான 6 நாட்களில் உலகளவில் பல கோடி அள்ளி ‘பதான்’ படம் மாபெரும் சாதனை...!
வெளியான 6 நாட்களில் உலகளவில் பல கோடி அள்ளி ‘பதான்’ படம் மாபெரும் சாதனை படைத்துள்ளது.
‘பதான்’ படம் சர்ச்சை
பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பதான்’. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியானது.
இதில், ‘பேஷாராம் ரங்’ பாடலானது கடும் சர்ச்சையை கிளப்பியது. அதில் நடித்துள்ள தீபிகா படுகோனே காவி நிற உடை அணிந்து படுகவர்ச்சியாக நடனமாடியுள்ளார். காவி நிறத்தில் பிகினி உடையில் தீபிகா தோன்றிய காட்சிகள் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் உள்ளது என்று பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இப்பாடலை தடை செய்யக்கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
‘பதான்’ படம் ரிலீஸ்
இத்தனை எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மத்தியில் கடந்த ஜனவரி 25ம் தேதி ‘பதான்’ படம் இந்தியாவில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட திரைகளிலும், வெளிநாடுகளில் 2500-க்கு மேற்பட்ட திரைகளிலும் வெளியானது.
இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய பிரதேச மாநிலம், பர்வானியில் உள்ள திரையரங்கின் முன் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அதேபோல் இந்தூர், குவாலியரிலும் பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது.
பல கோடிகளை அள்ளிய ‘பதான்’ படம்
இந்நிலையில், ‘பதான்’ படம் வெளியான 5 நாட்களில் உலகளவில் ரூ.542 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படம் ஏற்கெனவே இந்தி பாக்ஸ் ஆபிஸில் பெரும்பாலான தொடக்க வார இறுதி சாதனைகளை முறியடித்திருக்கிறது.
அதிக வசூல் செய்த டாப்-10 இந்தி படங்களில் இப்படம் நுழைந்துள்ளது. கேஜிஎப் அத்தியாயம் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய படங்களைத் தொடர்ந்து இப்படம் இப்போது அதிக வசூல் செய்து 3வது இந்தியத் திரைப்படமாக சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தின் வசூல் சாதனை பொன்னியின் செல்வன் வசூலை முந்தியுள்ளது.
திரைப்பட வர்த்தக ஆய்வாளரான ரமேஷ் பாலா உலகளவில் பதான் படம் 6 நாட்களில் ரூ.600 கோடி வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பதான் ரூ 600 கோடி வசூலுடன் ஆல் டைம் டாப் 10 இந்திய வசூல் படங்கள் பட்டியலில் நுழைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.