ஆட்டோல தப்பா தொட்டுட்டான் : கொந்தளித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh Sexual harassment
By Irumporai Sep 29, 2022 09:49 AM GMT
Report

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

அத்துமீறிய ஆட்டோ ஓட்டுநர்

பொது போக்குவரத்தை, வேலை செய்யும் என எல்லா இடங்களிலும் பெண்களுக்கு எதிரான செயல்கள் அரங்கேறி வருகிறது.இந்த வரிசையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் ஆட்டோ ஓட்டுனர் அத்துமீறியுள்ள சம்பவம் நடந்துள்ளது

ஆட்டோல தப்பா தொட்டுட்டான் : கொந்தளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் | Sexually Molests Woman Who Traveling In An Auto

இளம்பெண் ஒருவர் தனது தோழியுடன் இரவு சென்னை ஓஎம்ஆர் சாலையிலுள்ள பிரபல ஹோட்டலுக்கு சென்றார் அதற்காக ஊபர் ஆட்டோ புக் செய்தார், செல்வம் என்ற ஆட்டோ ஓட்டுனர் பிக்அப் செய்ய வந்தார், பின்னர் அந்த பெண்கள் இருவரும் ஆட்டோவில் பயணித்தனர் அப்போது ஹோட்டல் வாசலில் அவர்கள் இறங்கினர் .

அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் அந்த பெண்ணின் மார்பில் கை வைத்து அழுத்திய தாக கூறப்படுகிறது, இதில் அலறியடித்து ஆட்டோவில் இருந்து மற்றொரு பெண் வெளியில் ஓடிவந்தார்.

அதைக் கண்டு பதற்றம் அடைந்த தோழி என்ன நடந்தது என கேட்டார், அந்தப்பெண் நடந்தவற்றை கூறினார், பின்னர் இருவரும் சேர்ந்து ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க முயற்சித்தனர், ஆனால் ஆட்டோ ஓட்டுனர் அதற்குள் அங்கிருந்து தப்பினார், உடனே அந்த பெண் நடந்த வற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், 100க்கு அழைத்து புகார் கொடுத்தார். 

கொந்தளித்த ஐஸ்வர்யா

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளான நிலையில் நடிகர் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்துள்ளார் , தனது ட்விட்டர் பதிவில் :

இது போன்ற முட்டாள்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும்... நடவடிக்கை எடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் ,மேலும் நீங்கள் வலிமையான பெண்ணாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.