முதலிரவில் மிருகத்தனம் , மயங்கி விழுந்த மணப்பெண் : புதுமாப்பிள்ளைக்கு சிறை
நாகை அருகே திருமணமான மறுநாளில் மணப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாப்பிள்ளை கைது செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
நாகப்பட்டிணம் மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள தொழுதூர் உச்சிமேட்டுத்தெருவை சேர்ந்தவர் பிச்சையன் மகன் ராஜ்குமார். இவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் குதம்பநயினார் கோவில்தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் நளினிக்கும் (கடந்த 27 தேதி) இரு தினங்களுக்கு முன் நாகை அருகே ஆலத்தம்பாடி தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
முதலிரவில் மிருகத்தனம்
அன்றிரவு நடந்த முதல் இரவில், மணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை, பாலியல் தொல்லை கொடுத்து மிருகத்தனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உறைந்த நளினி அங்கே மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த பெண்ணின் உறவினர்கள் நளினியை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில். தனது மகளுக்கு தாலி கட்டிய ராஜ்குமார், முதலிரவில் வக்கிர புத்தியுடன் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும், பாலியல் சீண்டலினால் உடலின் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும்.
தனது மகளை மானபங்கம் மற்றும் அவமானப்படுத்திய புதுமாப்பிள்ளை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, புதுப்பெண்ணின் தாயார் பரமேஸ்வரி நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறவினர்களுடன் வந்து புகார் அளித்தனர்.
சிறையில் வைத்த காவல்துறை
புகாரை விசாரித்த நாகை எஸ்பி ஜவஹர் உத்தரவின் பேரில் ராஜ்குமாரை நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் கைது செய்து நாகை மாவட்ட சிறையில் அடைத்தனர்.
கட்டிய மனைவியாக இருந்தாலும், அனுமதி இல்லாமல் தொடக்கூடாது என்று சட்டம் இருக்கின்ற நிலையில்,மனைவியின் அனுமதி இல்லாமல் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு கணவர் அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 5 பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.